குழந்தைகள் பூ போல. பூவை எப்படி கையாள்கிறோமோ அப்படியே அவர்களும். அழகாய் மலர்ந்த பூவை கையால் பறித்துக் கசக்கி முகர்கிறோமா என்ன. அப்படிப்பட்ட மலரினும் மெல்லிய குழந்தைகளை அடிப்பதும் துன்புறுத்துவதும் என்ன நியாயம்.
நீ முன்னால் பிறந்ததால் அவர்களுக்கு தாயாகவோ தந்தையாகவோ இருக்கிறாய். அவ்வளவே. சில பல வருடங்கள் மூத்தவர்கள் என்பதால் நமக்கு பிறந்த பிள்ளைகள் நம் அடிமைகளா என்ன?
அன்பைக் கொடுத்து அன்பை விதைப்போம்.
பண்பாய் நடந்து பாதை அமைப்போம்

No comments:
Post a Comment